• Sep 20 2024

பாடகர் கே கே-க்கு இந்த சிகிச்சை வழங்கியிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்; டாக்டர் கருத்து..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் கே கே 2022.05.30 அன்று காலமானார். இவருடைய அகால மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் கே கே-இன் மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தாபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரின் உடல் அன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.

அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட நிலையில் டாக்டர் ஒருவர் கருத்து கூறியிருப்பதாவது. கே கே-இன் இதயத்தின் இடதுபக்க பிரதான கரோனரி தமனியில் மிகப்பெரிய அடைப்பு ஒன்றும், பல்வேறு பிற தமனிகள் மற்றும் துணை தமனிகளில் சிறிய அடைப்புகளும் இருந்தன. இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அதிகப்படியான உற்சாகத்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிரை பறித்துள்ளது.

பாடகர் கே கே மயங்கி விழுந்தவுடனேயே யாரவது அவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement