பிரபல பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் நாட்டுப்புற பாடல்களுக்கு பேர் போன ஒருவராகவும் விளங்கி வருகின்றார். இவ்வாறான பல பாடல்களை பாடி தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர்.
அதுமட்டுமல்லாது பல தொலைக்காட்சி சேனல்களிலும் பாடியுள்ளார். அத்தோடு பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். அந்தவகையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் தனது மனைவி அனிதாவுடன் இணைந்து இந்திய மற்றும் வெளிநாடு என 3000 இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளனர்.
மேலும் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள குப்புசாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்குபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதிக்கு 2 அழகிய மகள்கள் உள்ளனர் அதில் மூத்தமகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணமும் நடந்தது. இந்நிலையில் அவரது திருமணத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிறது.
இதோ பாடகர்களின் குடும்ப புகைப்படம்..!
Listen News!