• Sep 21 2024

பயில்வானைத் தூண்டி விட்டது தனுஷ் தான்-சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை முன்வைக்கும் பாடகி சுசித்ரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து "மாப்பிள்ளை, திருடா திருடி, மாரி" எனப் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் சிம்புவைப் போலவே பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் அதிகளவில் சிக்குபவராக நடிகர் தனுஷ் உள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் சமீபத்தில் விகாரத்து இடம்பெற்றிருந்தது.

விகாரத்து ஆன காலத்திலிருந்தே தனுஷ் பல பிரச்சினைகளில் சிக்கிய வண்ணம் தான் உள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக அனைவரும் மறந்துபோய் இருந்த விஷயம் ஒன்று தற்போது இவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளது.

அதாவது சில வருடங்களுக்கு முன்னர் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் மீது ஏராளமான புகார்களை வைத்திருந்தார். அதில் அவர் தனுஷின் திரைமறைவு லீலைகள் பற்றியும் பேசியிருந்தார். அதில் சில போட்டோக்களையும் அவர் ஆதாரமாக முன்வைத்திருந்தார். எனினும் சில நாட்களிலேயே சுசித்ரா மனநிலை சரியில்லாதவர் என்று கூறி அந்த விவகாரத்தை அப்படியே மூடி மறைத்து விட்டார்கள்.

இந்த விஷயத்தினால் தான் ஐஸ்வர்யாவுக்கு தனுஷிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. அது தற்போது விவாகரத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சமீபத்தில் பத்திரிகையாளர் பயில்வான் சுசித்ரா குறித்து சில தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாகவும் இதனால் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு பயில்வானை இப்படித் தூண்டி விட்டது தனுஷ் தான் எனவும் கூறியிருக்கின்றார் பாடகி சுசித்ரா.

இவ்வாறு தனுஷ் மீது சுசித்ரா அவதூறு பேசியிருப்பினும் தனுஷ் தற்போது வரை அமைதியாக இருப்பது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தனுஷ் அமைதியாக இருப்பதற்கு காரணம், தனுஷ் சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று சுசித்ராவிடம் இருப்பது தான் என்று பலர் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement