• Sep 20 2024

இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருந்தா, எப்ப 500 மாலைய முடிக்கிறது.. ‘சிறகடிக்க ஆசை’ மீனா

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிறகடிக்க ஆசைஎன்ற சீரியல் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பியிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அவ்வப்போது தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



அந்த வகையில்சிறகடிக்க ஆசைசீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போதுசிறகடிக்க ஆசைசீரியல் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது 500 மாலை முத்து ஆர்டர் வாங்கி வந்த நிலையில் அந்த மாலையை மீனா தனது தங்கை மற்றும் சிலருடன் சேர்ந்து விறுவிறுப்பாக கட்டிக் கொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சியை எடுப்பதற்காகசிறகடிக்க ஆசைதயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு பூக்களை மட்டும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக உண்மையிலேயே பூக்களை வாங்கி பூக்களை கட்டுபவர்களை வைத்து மாலைகளை கட்டி வருகின்றனர் என்பதும் இதனால் படப்பிடிப்பு தளமே ஒரு பூக்கடையாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோமதி பூக்களுடன் கூடிய புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் ஆக, ‘இப்படி போஸ் கொடுத்து கொண்டு இருந்தால் 500 மாலைகள் எப்போது கட்டுவது? சீக்கிரம் மாலை கட்டி முத்துவிடம் கொடுத்து அனுப்பி விடுங்கள் என்றும் ஜாலியான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement