சன் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சீரியல்களில் ஒன்று தான் ரோஜா. இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் பிரியங்கா நல்காரி. இந்த தொடர் சுமார் 4 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து 'சீதா ராமன்' என்கிற தொடரில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். ஒரு பெண்ணின் உண்மையான அழகு அவளின் மனசு தான் என்றும், முகம் இல்லை என்கிற கருத்தை மையமாக வைத்தே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் துவங்கிய சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிலையில் தன்னுடைய தனிப்பட்ட விடயம் காரணமாக பிரியங்கா இந்த சீரியலில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து தற்பொழுது இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ரீ பிரியங்கா கமிட்டாகியுள்ளார். எனவே இந்த சீரியலில் இருந்து விலகும் பிரியங்கா அடுத்த சீதாவாக இவங்க தான் நடிக்கப் போறாங்க என ஸ்ரீ பிரியங்காவை அறிமுகம் செய்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ராஜா ராணி சீரியிலில் இருந்து விலகும் போது ஆல்யாவும் இப்படித் தான் றியாவை அறிமுகம் செய்தார். அதை அப்படியே காப்பியடித்து விட்டீர்களா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!