• Sep 20 2024

உருகி உருகி காதலித்த சிவாஜி – பத்மினி..! திருமணம் செய்யாமல் போனதுக்கு காரணம் இது தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் ஒன்றாக நடிப்பவர்கள் காதல் வயப்படுவது என்பது இயல்பான ஒன்று. 20 வருடத்திற்கு முந்தைய சினிமா காதல் என்பது இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.

நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருந்தாலும் இவர்களுடைய காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை என்பது அவர்களுடைய குடும்பத்தை சார்ந்ததாகவே இருந்தது. இதனால் சினிமா நட்சத்திரங்களின் பல காதலர்கள் சேராமல் போனதாக நிறைய கதைகள் சொல்லப்படும். அப்படி ஒரு காதல் கதை தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி ஜோடியின் கதை.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா, சௌகார் ஜானகி என அப்போதைய முன்னணி நடிகைகள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் அவருக்கு கரெக்டான கதாநாயகியாக இருந்தவர் நடிகை பத்மினி. இந்த ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.

ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலித்ததாக நிறைய பத்திரிகைகள் அப்போது எழுத ஆரம்பித்தன. இருந்தாலும் சிவாஜி தன்னுடைய உறவுக்கார பெண்ணான கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிவாஜி மற்றும் பத்மினி இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பத்மினி சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகிய பிறகு ஒரு முறை அவரிடம் நீங்கள் ஏன் சிவாஜியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரொம்ப நேரம் யோசித்த பத்மினி, நாங்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும், நான் வேறு ஜாதி அவர் வேறு ஜாதி என்று சொல்லி இயல்பாக சொல்லி  முடித்து விட்டாராம்.

இவர்கள் இருவருடைய காதலுக்கும் தடையாக இருந்தது ஜாதி தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. 



Advertisement

Advertisement