தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.
ஜெசியின் குடும்பத்தார் வீட்டுக்கு வந்திருக்க ஆதி அவர்களை ஓடி ஓடி கவனிக்கிறான். ஜெசியின் அப்பாவுக்கு வேர்த்து கொட்ட ஆதி ஓடிப்போய் டேபிள் பேன் எடுத்து வந்து வைக்கிறான்.
பிறகு இரண்டு குடும்பமும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டு அடுத்ததாக நாளைக்கு வந்து வீட்டில் திருமண விஷயம் பற்றி பேசி நாள் குறித்து விடலாம் என சொல்லி விட்டு ஜெசி குடும்பத்தார் கிளம்பிச் செல்கின்றனர்.அடுத்ததாக சரவணன் பார்வதி மற்றும் அவருடைய அப்பா என மூவரும் சேர்ந்து ஆதியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குகின்றனர். ஜெசி உன்ன உண்மையா காதலிச்சு இருக்கா ஆனா நீ அப்படி இல்ல ஒரு பிரச்சனைன்னு வந்ததும் யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்ட, அவ மனசுல உன்ன பத்தி எப்படி பதிந்து இருக்கும் என்பதை யோசித்துப் பாரு, இனிமேலாவது உண்மையாய் இரு நேர்மையாக இரு உண்மையை மட்டும் பேசு என அறிவுரை கூறுகின்றனர்.
பிறகு சிவகாமி ஆதியை நாம சரியா வளர்க்கலையோ என கணவரிடம் வருத்தப்பட்டு பேச ரவி ஆறுதல் கூறுகிறார். மேலும் எனக்கு நடந்ததை எல்லாம் பார்க்கும்போது ஆதி அப்படியே அவங்க பக்கம் சாய்ந்து விடுவான் என்று பயமா இருக்கு என்ன சொல்ல எத பத்தியும் பெருசா யோசிக்காத என கூறுகிறார் ரவி.
அடுத்ததாக அர்ச்சனாவும் செந்திலும் ஒரு பக்கம் ஆதி கல்யாணம் பற்றி பேச இன்னொரு பக்கம் சரவணன் சந்தியா பேசிக் கொள்கின்றனர். சரவணன் சந்தியாவும் இந்த கல்யாணம் நல்லபடியா நடந்து முடியும் என பேச அர்ச்சனா ரெண்டு பேரும் வேற வேற மதம் என்றதால் அவ்வளவு எளிதாக நடந்து முடியாது என கூறுகிறார். ஜெசியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவளை எனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு இந்த சந்தியாவை போட வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம் என சொல்ல செந்தில் அர்ச்சனாவை திட்டி விட்டு விட்டு எழுந்து சென்று விடுகிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Listen News!