• Sep 20 2024

சாமியாரை எதிர்க்கும் சந்தியாவுக்கு சிவகாமி செய்த செயல்- ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் இரு சீரியல்கள் தான் ராஜா ராணி.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..

சந்தியா சாமியாரை எதிர்த்ததன் காரணமாக ஏற்றி வைத்த மூன்று விளக்கில் ஒரு விளக்கை அணைக்கிறார் சிவகாமி. இதனால் சந்தியா தேம்பி அழ அர்ச்சனா அவரை நக்கல் அடித்து விட்டு செல்கிறார்.

அதன் பின்னர் சந்தியா ஒரே இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வந்த சரவணன் இது எல்லாம் நாம எதிர்பார்த்ததுதானே இன்டைக்கு நம்பள தப்பா நினைக்கிற எல்லோரும் நாளைக்கு சாமியாரோட உண்மையான முகம் தெரிந்ததும் புரிஞ்சிப்பாங்க என கூறுகின்றார்.

ஆதாரங்களை சேகரிக்க வேண்டுமென ஆறுதல் சொல்கின்றார்.அதன் பின்னர் சிவகாமியுடன் அவருடைய கணவர் ரவி சந்தியா சரவணன் பக்கம் ஏதோ நியாயம் இருக்க வாய்ப்பு இருக்கின்றது என பேச அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

செந்திலிடம் சரவணன் இது பற்றி பேசும் முயற்சி செய்து செந்தில் சந்தியா நீ எப்போதும் தனி ரூட்டில் போவாங்க அவங்க பின்னாடி போகிறது நிறுத்து. மேலும் அவங்களுக்கு எடுத்து சொல்லி புரியவை அம்மா இப்படி இருந்து நான் பார்த்தது கிடையாது அவங்களை கஷ்டப்படுத்தாத என கூறுகிறார்.

மறுநாள் காலையில் சிவகாமி யோசனையில் இருக்க அங்கு வந்த ரவி மீண்டும் இது பற்றி பேச அவர் உடனே சந்தியா சரவணன் இந்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் கூப்பிடுங்க என சத்தம் போட அவர் சந்தியா சரவணனை கூப்பிட செல்கின்றார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement