தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரெஜினா. இவர் பிரபல திரைப்பட இயக்குநரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கின்றார்.
இவ்வாறு இயக்குநராக அவதாரம் எடுத்த ரெஜினா ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலமாக நடிகையாகவும் கால் பதித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் விமலுடன் இணைந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தில் நடித்தார்.
இப்படம் ஆனது வெளியாகி ஹிட் ஆன போதும் ரெஜினாவுக்கு பட வாய்ப்புகள் சரிவரக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஜோடியாக அடுத்தடுத்த பல படங்களில் நடித்தார்.
இவ்வாறாக பல வழிகளிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற ரெஜினாவின் கதைத் தேர்வு ஆனது சமீப காலமாக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், வில்லி வேடங்களிலும் தைரியமாக நடித்து அசத்தி வருகின்றார்.
அந்தவகையில் விஷால் நடிப்பில் வெளியான 'சக்ரா' என்ற படத்திலும் வில்லியாக நடித்திருந்தார். அடுத்ததாக அருண் விஜய்யின் நடிப்பில் உருவான 'பார்டர்' என்ற படத்திலும் எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றினை ஏற்று நடித்துள்ளார்.
தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கின்ற ரெஜினாவின் கைவசம் தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் உள்ளன.
இந்நிலையில் சமீபகாலமாக ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரெஜினா பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார்.
அப்பேட்டியில் அவர் கூறுகையில் "2020 இல் என்னுடைய காதல் முறிந்துபோனது. அந்த அதிர்ச்சியிலும், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட எனக்கு கொஞ்ச நாட்கள் எடுத்தது" என கூறியிருக்கின்றார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் "நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. இனிமேல் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே இப்போ வரைக்கும் தெரியாது.
ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார்" எனவும் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.
அத்தோடு "இதனால் எனது வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன்" எனவும் கூறியிருக்கின்றார். அத்தோடு இப்போதைக்கு தான் செய்த படங்கள் எல்லாமே தனக்கு மிகவும் பிடித்தவை தான் எனவும் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Listen News!