தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தை இயக்குநர் அனுதீப்இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரிய ரிஷபோப்ஸ்கா நடிக்கிறார். தெலுங்கு படம் என்றாலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டில்தான் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக காரைக்குடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!