• Sep 20 2024

அனிரூத் நோ சொன்னதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளருடன் கை கோர்த்த சிவகார்த்திகேயன்-அதுவும் எந்த படத்திற்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி உள்ளது. மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் உடன் அதிதி ஷங்கர், சுனில், சரிதா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

 இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படம் தான் எஸ்.கே.21. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. 


இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இருவரும் ஜோடி சேர்ந்து நடிப்பது இதுவே முதன்முறை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இந்நிலையில், எஸ்.கே.21 படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதன்படி இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார் என அறிவித்துள்ளனர். வழக்கமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பார். தற்போது அவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளதால், அவருக்கு பதில் இப்படத்திற்கு இசையமைக்க ஜிவி பிரகாஷை கமிட் செய்துள்ளனர். 


அவர் சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்.கே.21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த உள்ளார்கள். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்க உள்ளாராம். இப்படத்திற்காக அவர் பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளாராம். இதன் காரணமாக அவர் டுவிட்டரில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement