தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
மிமிக்ரி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அந்த துறையில் சாதிக்க பல பயிற்சிகள் எடுத்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தனது வருங்காலத்திற்காக அழகாக பயன்படுத்தி ஒவ்வொரு லெவலாக வளர்ந்து இப்போது இந்த இடத்தில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
இந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் ரூ. 125 கோடிக்கு மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் மற்றும் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது.
இந்த நிலையில், கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருந்த படம் பொங்கல் தினத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது, மாவீரன் படத்தில் பிஷியாகி உள்ளதால் சிவகார்த்தகேயன்- கமல் இணையும் படம் தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அத்தோடு விக்ரம் படத்திற்குப் பின் கமல், இந்தியன் 2 படத்தில் பிஸியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிறசெய்திகள் ;
- ரஜனிகாந்தின் மகளாய் நான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றேன்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- தனுஷை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை-இது தான் விசயமா..?
- அந்த நடிகருடன் மட்டும் உறவில் உள்ளாரா..? உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா..!
- விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டு சீரியல் நடிகை செய்த செயல்-விளாசும் நெட்டிசன்கள்..!
- ரகசியத்தை போட்டு உடைக்கும் கண்ணம்மா -ஷாக்கில் பாரதி…நடக்கப்போவது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!