• Sep 21 2024

பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்..!இந்த நல்ல மனசு வேற யாருக்குத்தான் வரும்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது பயணத்தை ஆரம்பித்து தனது திறமையினாலும் நம்பிக்கையினாலும் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்ற அந்தஸ்த்தைக் கொடுத்து அறிமுகப்படுத்தி வைத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். அதாவது இவரின் இயக்கத்தில் வெளிவந்த 'மெரினா' என்ற படத்திலேயே இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'மனம் கொத்திப் பறவை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'காக்கிச் சட்டை', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'டான்' எனப் பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவரின் படங்களில் எப்போதுமே சிரிப்பிற்கு குறைவு இருக்காது. அந்தளவிற்கு காமெடியாக நடிக்கக் கூடிய திறமை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உண்டு.

இவ்வாறாக முன்னணிக் கலைஞராக மாறி வருகின்ற நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை போன்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பாராட்ட எப்போதுமே மறப்பதில்லை. இதேபோன்றே இவர் தற்போதும் இந்திய செஸ் சாம்பியன்கள் ஆகிய பிரக்ஞானந்தாயும் மற்றும் அவரது சகோதரியாகிய வைஷாலியையும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

அதாவது பாராசின் ஓபன் செஸ் தொடர் சமீபத்தில் செர்பியாவில் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலியுடன் இணைந்து முக்கியமாக 7 தமிழர்கள் இந்திய சார்பில் பங்கேற்று இருக்கின்றனர். இதில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமன்றி அவரது சகோதரி வைஷாலியும் மகளீர் செஸ் பிரிவில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரை மாதிரி நல்ல மனசு வேற யாருக்கு வரும்?.. வளர்ந்து வரும் கலைஞர்களை சிவகார்த்திகேயன் போலவே மற்றவர்களும் வாழ்த்த வேண்டும் என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement