அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர், பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் தொடங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, அதில் நடிப்பவர்கள் குறித்தும் அப்டேட் கொடுத்தது. அதன்படி முதற்கட்டமாக ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி ஆகியோர் கமிட்டாகியுள்ளார்கள்.
ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டாரா இல்லையா என, இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், படப்பிடிப்பு மட்டும் ரகசியமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
எனினும் , ஜெயிலர் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்தும் எந்த தகவலும் இல்லை. ஆனால், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், தமன்னா ஆகியோர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே பருத்தி வீரனில் சித்தப்புவாக கலக்கிய பிரபல நடிகர் சரவணன், ஜெயிலர் படத்தில் நடிக்கவிருப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது.
நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருந்தது. இந்நிலையில், தற்போது அந்த பாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் ஜெய் நடிக்கலாம் என புதிய தகவல் குறித்து வெளியாகியுள்ளது.
விரைவில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, அவர் ரஜினியின் மகனாக நடிக்கிறார் என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
'பகவதி' படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஜெய், சென்னை 600028, எங்கேயும் எப்போதும், வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், கலகலப்பு 2, குற்றம் குற்றமே, பட்டாம்பூச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை ரஜினியுடன் நடிக்காத ஜெய், முதன்முறையாக ஜெயிலர் படத்தில் அவருடன் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
Listen News!