தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் ஷங்கர். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல திரைப்படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் ராம்சரணை வைத்து RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் அடுத்தடுத்து இயக்க இருக்கிறார்.
இதில் RC15 படத்தின் ஆரம்ப விழா கடந்தாண்டு செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது.
பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பானது ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!