• Sep 20 2024

தனது திருமணம் குறித்த திடீரென ரசிகர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தனது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

தமிழ் சினிமாவில் பாரதி ராஜாவின் உதவி இயக்குநராக இருந்து அஜித் நடிப்பில் வெளியாகிய வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் எஸ்.ஜே.சூர்யா.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.இதனை அடுத்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் எஸ்.ஜே.சூர்யா. அவரை வைத்து குஷி படத்தை இயக்கினார். இப்படம் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இவ்வாறு முதல் இரண்டு படத்திலேயே அஜித், விஜய் என இரண்டு முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிகண்ட எஸ்.ஜே.சூர்யா, இதனைத் தொடர்ந்தும் சில திரைப்படங்களை இயக்கினார் அவை எதுவும் வெற்றி பெறவில்லை.

இதனால் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு முழு நேர நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதன்படி கல்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்த போது தான் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

அதுவரை ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவை, தனது ஸ்பைடர் படம் மூலம் வில்லனாக களமிறக்கினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்து வில்லன் வாய்ப்பு குவிந்தது. அதன்படி விஜய்யின் மெர்சல், சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களில் இவரது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்ற நிலையில் இவரது திருமணம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவில் பிசியாகி இருக்கும் அவருக்கு விரைவில் திருமணம் என தகவல் பரவியது. 54 வயதில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்ப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அவர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "இந்த செய்தி உண்மை இல்லை. நான் திருமணம் பற்றி யோசிக்க கூட இல்லை" என தெரிவித்து இருக்கிறார்.மேலும் தற்போது கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும் தான் இருக்கிறது எனவும் கூறி இருக்கிறார் அவர். 



Advertisement

Advertisement