பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி பல சுவாரஷ்யங்களுடன் விறு விறுப்பாக ஔிபரப்பாகி வருகின்றது. இந் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை சண்டைக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் வெளிவந்த முதல் இரண்டு ப்ரோமோவிலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும், ஸ்மோல் வீட்டில் இருப்பவர்களுக்கும் பஞ்சாயத்து ஆரம்பமாகியிருந்தது. இந் நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
பெரிய வீட்டில் இருப்பவர்கள் என்ன சமையல் செய்ய வேண்டுமோ, அதன் பெயர்களை எழுதிக் கொடுக்கின்றனர். ஆனால் ஸ்மோல் வீட்டில் இருப்பவர்கள் தங்களால் சமைக்க முடியாது என்று சொன்னதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் அங்கு இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து விடுகின்றனர். இதிலிருந்து சண்டை ஆரம்பமாகியது.
இந்நிலையில் மூன்றாவதாக வெளிவந்த ப்ரோமோவில் விசித்திரா விஷ்ணுவை பார்த்து சொல்கின்றார் உங்களால் இங்கு எல்லாரும் சாப்பிடாமல் இருக்கிறாங்க என, அதற்கு வினுஷா சொல்றாங்க நீங்க மட்டும் நல்லா சப்பிட்டிட்டு இருக்கிறீங்க என, ஜோவிகா விசித்திராகிட்ட சொல்றாங்க தலைசுத்தீடும் எனக்கு கொஞ்ச நேரத்தில் என , நிக்ஸன் ஜோவிகா கதைக்கிறாங்க ரெட்காட் கொடுக்கனும் என , அடுத்த கட்டமாக சரவணன் சொல்றாரு பிக்பாஸ் வந்து முடிவு சொல்லும் வரை நானே சமைக்கிறேன். யாரும் பக்கத்தில வரகூடாது என்று சொல்றாரு, அப்போ பிரதீப் சொல்றாரு உன் கட்டளையை கேட்க முடியாது என கூறுகின்றார். அதிலிருந்து சரவணனுக்கும் பிரதீப்புக்கும் வாக்கு வாதம் ஆரம்பிக்கின்றது, இதுதான் மூன்றாவது ப்ரோமோவில் வெளி வந்திருக்கின்றது.
Listen News!