• Sep 20 2024

''எனக்கு அந்த நடிகை மீது தான் ரொம்ப கிரஸ்'' - பிரசன்னா சொன்னதைக் கேட்டு ஷாக்கான சினேகா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த விருதுவிழாவில் சினேகாவுடன் ஜோடியாக பங்கு கொண்ட பிரசன்னாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது, பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு பிரசன்னா, நடிகை தமன்னா என்று தெரிவித்து இருந்தார். ஆனால் சினேகா தான் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் பயந்து போன பிரசன்னா, எதுவாக இருந்தாலும் வீட்ல போய் பேசலாம்மா என்று கெஞ்சியுள்ளர். ஆனால் சினேகா அதன்பின், அவருக்கு தான் இல்லாமல் தமன்னா பிடிக்கும் ஹன்சிகா பிடிக்கும் எல்லாமே பிடிக்குமாம் என்று கிண்டலாக கேட்டுள்ளார்.


Advertisement

Advertisement