சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதன்பின் கணவருக்கு ஆறுதலாக இருந்து வந்த ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அறிக்கை மூலம் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதன் பின் தற்போது, லால் சலாம் என்ற படத்தினை இயக்க பூஜையும் போட்டுள்ளார். அத்தோடு விஷ்ணுவிஷால், விக்ரந்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் இன்று டிசம்பர் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் அவரது போயஸ் கார்டனில் இல்லாமல் வெளியில் சென்றுள்ளார்.
தன் அப்பாவின் பிறந்தாளன்று மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா.எனினும் இதற்கு தனுஷ் ரசிகர்கள் மருமகன் இல்லாமல் பேரப்பிள்ளைகளுடம் பிறந்தநாள் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.அத்தோடு தனது மாமனாருக்கு தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!