சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இனியா.இதில் தற்போது பல உண்மைகள் தெரியவந்து சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த சீரியலில் விக்ரம் பொல்லாதவன் என்ற உண்மை இனியாவுக்கு திருமணத்திற்குப் பிறகு தான் தெரிய வந்துள்ளது. இதனால் இனியா விக்ரமுடன் அடிக்கடி சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் சோனாலி தன்னுடைய திருமணத்தை நிறுத்த வந்திருந்தாள் என்பனை இனியா தனது கல்யாண அல்பத்தைப் பார்த்து அறிந்து கொண்டார். இதனால் சோனாலியை தேடி திரிந்ததாடு மனநிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருந்து சோனாலியை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டார்.
இந்த நிலையில் விக்ரம் மற்றும் இனியா இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பார்த்த சோனாலி விக்ரம் குறித்து ஏதோ சொல்ல வருகின்றார் என்பதை அறிந்த இனியா விக்ரமுக்கும் சோனாலிக்கும் இடையில் ஏதோ தொடர்பு இருக்கின்றது எனக் கூறுகின்றார்.
இதனால் விக்ரமின் அம்மா விக்ரமை தனியாக கோயிலுக்கு அழைத்துச் சென்று தன் தலையில் சத்தியம் வாங்கி உண்மையைக் கேட்கின்றார்.விக்ரம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!