• Sep 21 2024

விரைவில் மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாரா சோனியா அகர்வால்..? அதுவும் யாரைத் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  2003-இல் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பின்னர் இவர் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 


சோனியா அகர்வால் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குநர் செல்வராகவனை காதலித்து 2006-இல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். 

இதனைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனியா அகர்வாலும் மறுமணத்துக்கு தயாராவதாக அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ஒரு சில தகவல்கள் பரவி வந்தன. அதாவது பாடகர் எஸ்.பி.பி.சரணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரை சோனியா அகர்வால் மணக்க இருப்பதாகவும் முன்பு பேசப்பட்டது. 


சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தற்போது விளக்கம் அளித்து சோனியா அகர்வால் கூறும்போது "ஒரு தொடரில் நானும், எஸ்.பி.பி.சரணும் நடித்த திருமண காட்சி புகைப்படம் வெளியாகி நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்தியை பரப்பினர். எனக்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன்" எனக் கூறியிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது "எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை நான் சந்திக்கவில்லை. அந்த நபருக்காகத் தான் காத்து இருக்கிறேன்'' எனவும் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement