• Sep 20 2024

கேள்விக்குறியான மகனின் வாழ்கை - அமிர்தாவை வீட்டிலடைத்து வைக்க முனையும் பாக்கியா!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் ஒன் தொடராக அமைந்துள்ளது பாக்கியலட்சுமி.

குறித்த தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முக்கியமான கேரக்டர்களில் வலம்வரும்  நடிகர்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளனர்.

தன்னுடைய குடும்பத்தினரை சிறப்பாக பாதுகாத்து, தன்னுடைய கேரியரையும் கெத்தாக நடத்தி வருகிறார் பாக்கியா. 


அடுத்தடுத்து வரவுள்ள இன்னல்களை சமாளிக்கும் இடத்திலுள்ளார் குடும்பத் தலைவியான பாக்கியா.

தற்போது,  அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ் மீண்டும் வந்துள்ள  நிலையில் தன்னுடைய மகன் எழிலின் வாழ்க்கை என்னவாகுமோ என்ன அச்சம் பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிலாவை வெளியில் கூட்டிச் செல்ல முனைந்த மாமனாரை  தடுக்கிறார் பாக்கியா. அதற்கு பார்க்கில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்குமென காரணம் கூறுகிறார்.


இதையடுத்து, கோயிலுக்கு செல்ல முயன்ற ஈஸ்வரி மற்றும் அமிர்தாவையும்  தடுத்து நிறுத்தி  தானே ஈஸ்வரியுடன் கோயிலுக்கு செல்கிறார். 

அத்துடன், அமிர்தா குறித்த உண்மையை மாமியாரிடம்  சொல்லிவிடலாமா என்று நினைக்கிறார். ஆனால் அதையும் கைவிடுகிறார். 

தற்போது, அமிர்தா மற்றும் நிலாவை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்க  முனையும் பாக்கியா என்ன மாதிரியான முடிவெடுத்து தன்னுடைய மகனின் வாழ்க்கையை காப்பாற்றுவாரென  ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 



 

Advertisement

Advertisement