• Sep 20 2024

பாரதியால் ஷாக்கான சௌந்தர்யா... கண்ணம்மாவுக்கு நேர்ந்த அவமானம் – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சீரியல்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் ஙிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 கண்ணம்மா வீட்டில் சாந்தியை பெண் பார்க்க வர பாட்டி சொன்னது போல கண்ணம்மாவை கூடவே நிற்க வைக்க அவர்கள் சாந்தியை பிடித்திருப்பதாக சொல்லி கிளம்பி செல்கின்றனர்.

இதன் பின்னர்  பாக்கியா எதுக்கு கண்ணம்மாவை சாந்தியோட நிக்க சொன்னீங்க இப்பயாவது காரணம் சொல்லுங்க என கேட்க கண்ணம்மா கலரு கம்மில, அதனால தான் அவள நிக்க சொன்னேன். அத்தோடு இப்போ நான் சொன்ன மாதிரியே சாந்தியை பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டாங்க பாத்தியா என கூற பாக்யாவும் சாந்தியும் அந்த பாட்டியை திட்டி அனுப்பி வைக்கின்றனர்.

அத்தோடு அந்த பாட்டு பேசியதை கேட்ட கண்ணம்மா கண் கலங்க சாந்தி அவளுக்கு ஆறுதல் சொல்கின்றார்.இதன் பின்னர்  கண்ணம்மா மதுவிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவளை நீ அழகே இது இந்த ஊரோட கலரு உன்னை யாரு அழகு இல்லன்னு சொன்னது என கூறி சமாதானம் செய்கிறார்.

அடுத்ததாக பாரதி ஒரு இடத்தில் இருக்க அங்கு வரும் விஜயிடம் ஏன்டா லேட்டு என கேட்க கோவிலுக்கு போயிருந்ததாக சொல்ல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன் என பாரதி சொல்கிறார். அந்த கோவிலுக்கு நீ வர முடியாது என சொல்ல ஏன் என கேட்க அப்பாவோட ஆயுளுக்காக வேண்டிக்கிற கோவில் அது உனக்குத்தான் அப்பா இல்லையே என சொல்ல பாரதி வருத்தப்படுகிறார். விஜய் திரும்பத் திரும்ப பாரதியின் அப்பாவை நினைவு படுத்தி பாரதியை குடிக்க வைக்கிறார்.

இதன் பிறகு பாரதி வீட்டில் பெண் வீட்டார் வந்திருக்க அங்கு பாரதி குடித்து விட்டு வர அவர்கள் இந்த மாப்பிள்ளை வேண்டாம் எனக்கு வெள்ளிக்கிழமை சௌந்தர்யா அவமானப்பட்டு கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோடு முடிவடைகிறது.



Advertisement

Advertisement