• Sep 20 2024

திடீரென மயங்கி விழுந்த சௌந்தர்யா- தீவிரவாதிகள் போட்ட கட்டளையால் அதிர்சிக்குள்ளான பாரதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

 பாரதியுடன் டாக்டர் எனச் சென்ற ஆபீஸரை தீவிரவாதிகள் சுட்டு தள்ள பாரதி அதிர்ச்சிடைகிறான். நாங்க என்ன முட்டாப் பசங்க என நெனச்சீங்களா இந்த பாடியை வெளிய தூக்கி வீசுங்க என தீவிரவாதிகள் சொல்கின்றனர்‌.

பிறகு இந்த விஷயம் செய்திகளில் வெளியாக சௌந்தர்யா இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாரதிக்கு என்ன ஆச்சு என மயக்கம் போட்டு கீழே விழுகிறார். அதன் பிறகு தீவிரவாதிகள் ஆபீசரின் பாடியை கட்டி வெளியே தூக்கி போடுகின்றனர். பிறகு இது பாரதி இல்லை என தெரியுமா விக்ரம் இது டாக்டரே கிடையாது போலீஸ் அனுப்பிய ஆள் என கூறுகிறார். பாரதிக்கு எதுவும் ஆகி இருக்காது என சொல்கிறார்.


பிறகு தீவிரவாதிகள் பாரதியிடம் மத்திய அமைச்சருக்கு எதுவும் ஆகக்கூடாது அவருடைய உயிருக்கு ஆபத்துனா போலீஸ் உள்ள புகுந்துடுவாங்க அப்புறம் நாங்க இங்க இருக்கிற ஒருத்தரையும் உயிரோட விடமாட்டோம். இங்கே இருக்கவங்க எல்லாரோட உயிரும் இப்போ உன் கையில தான் இருக்கு ஒழுங்கா ஆப்ரேஷன் செய்து அமைச்சர காப்பாத்து என கூறுகின்றனர்.


அமைச்சரை காப்பாத்த என்னால் ஒருத்தரால் மட்டும் முடியாது எனக்கு சப்போர்ட்டா இன்னொரு டாக்டர் வேண்டும் என சொல்ல உங்களுக்கு கொடுத்த வாய்ப்பு முடிஞ்சு போச்சு ஒரே ஆளா நீதான் அமைச்சரைக் காப்பாற்றி ஆக வேண்டும் என கூறி விடுகின்றனர். இதனால் பாரதி அதிர்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement