• Sep 20 2024

5நிமிஷம் பேசினால் போதும்... மாரிமுத்து இழப்பினால்.. மேடையில் கண் கலங்கிய நடிகர் விமல்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் மூலம் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாக இவரின் நடிப்பு யாராலும் அடிச்சுக்கவே முடியாது. சீரியல் மட்டுமன்றி ஒரு சில படங்களில் நடித்தும் இறுக்கின்றார். 


அதாவது ‘பரியேறும் பெருமாள், கொம்பன், ஜீவா' ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  அதுமட்டுமல்லாது 'கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் மாரிமுத்துவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நடிகர் விமல் மாரிமுத்து குறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் அவர் கூறுகையில் "அவரோட இழப்பைக் கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அவர் குடும்பத்தையும் சரி, என் குடும்பத்தையும் சரி அவரோட குடும்பம் போல் தான் நினைப்பார், ரொம்ப உரிமையாகப் பழகுவார், அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு, நிறைய விடயங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு இருக்கு, அவரைப் பற்றி நிறைய விடயங்கள் எனக்கும் தெரியும்" என்றார்.


மேலும் "அதே மாதிரி எனக்கு மனசு சரி இல்லாமல் இருக்கிற நேரத்தில் அண்ணனுக்கு போன் பண்ணி ஒரு 5நிமிஷம் பேசினால் போதும் மனசில் உள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வச்சு விடுவார், அதற்காகவே அப்பப்போ அவரோட தொடர்பிலேயே இருப்பேன், அவரின் இயக்கத்தில் நடித்த 'புலிவால்' படம் எனக்குப் பெருமைக்குரிய ஒரு விடயமாக தான் நான் நினைக்கின்றேன், ஒரு சின்ன விஷயத்தையும் ரொம்ப நல்லா பண்ணனும் என்பதில் அவர் நிறைய நேரம் மெனக்கெடுவார்"எனவும் கண் கலங்கியவாறு கூறியுள்ளார் நடிகர் விமல்.

Advertisement

Advertisement