கேளடி கண்மனி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.
அர்னவ்விற்கு பிரபல சீரியல் நடிகையுடன் தொடர்பு உள்ளதாகவும் அர்னவ் தன்னை துன்புறுத்துவதாகவும் திவ்யா புகார் அளித்திருந்தார். இதனால் அர்னவ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்பொழுது அதிலிருந்து ரிலீஸானதிவ்யா மற்றும் அர்னவ் ஆகியோர் பிரிந்தே வாழ்கின்றனர். இருவரும் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இப்படியான நிலையில் திவ்யா நீண்ட நாளைக்குப் பிறகு அர்னவ் இலங்கைப் பெண் ஒருவரை ஏமாற்றினார் என்றும் அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு என்றும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்படியான நிலையில் அர்னவ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் நான் செய்யாத குற்றங்களை எல்லாம் சொல்லிட்டே போறாங்க. அதுக்கெல்லாம் ஆதாரம் இருந்தால் அதைக் கோட்டில் வந்து காட்டட்டும்.அவங்க சொல்லுறது எல்லாமே பொய் இப்படி என்மேல பழி போடுவதால் அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதோ தெரில.
இலங்கைப் பெண் என்னோட எக்ஸ் லவ்வர் தான் அவங்களும் நானும் லவ் பண்ணினோம். ஆனால் அவங்களும் குழந்தையை கலைக்கல. இது பொய் இதுக்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும். நான் அவங்களை பற்றி தப்பா சொல்லப்போறது கிடையாது. அவங்க பெருசா தப்பு பண்றாங்க. அதை மறைக்க என்னை மாட்டி விடுறாங்க. என் கிட்டையும் ஆதாரம் இருக்கு அதை நான் கோட்டில காட்டிக்கிறேன்.
இதுக்கெல்லாத்துக்கும் ஈஸ்வரன் தான் காரணம். அவன் சொல்லி தான் இவ எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கிறா. இதுக்கு மேலையும் அவங்க ஏதாவது பண்ணிட்டு இருந்தால் நானும் சும்மா விடமாட்டேன் உண்மைகளை உடைக்க வேண்டி இருக்கும். அவ தன்னுடைய குழந்தைகளுக்காக என்றாலும் யோசிச்சு நடக்கனும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!