இந்திய சினிமாவையே தன்னுடைய அழகினாலும், நடிப்பினாலும் ஆட்டிப் படைத்த ஒருவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்துப் பின்னர் இந்தியாவில் பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார்.
இவ்வாறு சினிமாவில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு துபாய்யில் மர்மமான முறையில் மரணமடைந்தது இந்திய சினிமாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமி, சிறுவயதில் ஸ்ரீதேவி பட்ட துயரங்கள் குறித்துக் கூறியிருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "ஒரு படத்தில் எனக்கும் நடிகர் ஜெய்சங்கருக்கும் மகளாக ஸ்ரீதேவி 6 வயதாக இருக்கும் போது நடித்தார். அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அப்படம் நின்றுபோனது. 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பாளர் அப்படத்தினை எடுக்கலாம் என்றும் நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று எங்களிடம் கேட்டுகொண்டார்.
அப்படி மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்த போது ஸ்ரீதேவிக்கு 10 வயதாக இருந்தது. அந்தவகையில் பெண்ணாக மலரத்துவங்கும் வயதில் கிளைமேக்ஸ் காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீதேவியை மேலாடையில்லாமல் தலைகீழாகத் தொங்கவிடும் காட்சியாக ஒன்று இருந்தது.
இதை கேட்டதும் உடனே ஸ்ரீதேவி என்னிடம், அக்கா எனக்கு சட்டை இல்லாமல் நிற்க ஒருமாதிரியாக இருக்கிறது என்று கெஞ்சிகேட்டாள். உடனே இந்த சீனை மாற்ற முடியாதா என்று சம்பந்தப்பட்டவர்களிடம் நான் கேட்டதற்கு அதெல்லாம் முடியாது கதையின் கண்ட்டினியூட்டி சீன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள்.
அந்த சமயத்தில் ஸ்ரீதேவியின் வேதனை, அவமானமதுடன் கண்ணீர் வடித்தவாறு நின்றாள். இதை அறிந்த ஸ்ரீதேவி அம்மா ராஜேஸ்வரி, தயாரிப்பாளரிடம் சென்று மன்னிச்சுக்குங்க சார் இந்த சீனில் என் மகள் நடிக்கமாட்டாள். இப்படி நடிச்சு பொழைக்கணும்னு அவசியமில்லை" என்று கூறி அவமானப்படுத்திவிட்டு சென்றுவிட்டார்.
நடிகை லட்சுமி கூறிய இந்தப் பகீர் தகவலானது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!