• Sep 21 2024

தனது கணவனை குக்வித் கோமாளி செட்டிற்கு அழைத்து வந்த ஸ்ருதிகா- இந்த வாரம் ஸ்பெஷல் எபிஷோட்டாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

ஒவ்வொரு வாரமும் சுவாரஸியமான டாஸ்க்குகளுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் கிரேஸ் கருணாஸ் வெளியேறினார். வழமைபோல இந்த சீசனிலும் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரே நடுவர்களாக இருக்கின்றனர்.

இப்போட்டியில் தற்பொழுது 7 பேர் தான் போட்டியாளர்களாக உள்ளனர். அத்தோடு இன்னும் சில வாரங்களில் இறுதிச்சுற்று இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த போட்டியில் முக்கிய போட்டியாளராகப் பங்குபற்றி வருபவர் தான் நடிகை ஸ்ருதிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது இவர் தனது கணவணுடன் இந்த வார நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement