தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக டாப் நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
அதன்படி த்ரிஷா விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்தோடு அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார். நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததே இல்லை.இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் கமல் 234. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துவிட்டது.
மேலும் கமல் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்றும் அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.எனவே இப்படத்தில் நடிக்கத் தான் த்ரிஷா மற்றும் நயன்தாராவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
த்ரிஷா சம்பளத்தில் இருந்த அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம்.இதனால் கமல் 234 படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நயன்தாரா நடிப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்கின்றனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!