• Sep 20 2024

சாம்பல் நிறத்தில் கதைகள் உயிரோட்டமாக இருக்கும்- மிரட்டலாக போட்டோ ஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் இறுதியாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'லாபம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார்' படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஆண்டு தெலுங்கானாவின் கோதாவரிகானியில் நடைபெற்றது.

இது தவிர நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனோக்ரோம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதற்கு தலைப்பாக "கருப்பு வெள்ளை நிறங்களை விட சாம்பல் நிறத்தில் கதைகள் உயிரோட்டமாக இருக்கும்" என தலைப்பிட்டுள்ளார்.இந்த போட்டோ ஷூட் பிரபல நனி சைவ அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பல்ப் இந்தியா நிறுவனத்திற்காக நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement