கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபடிக்க ஆரம்பித்துள்ளது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் தற்போது 10போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.அதில் தங்களுடைய அம்மா, அப்பா பற்றி ஒவ்வொரு போட்டியாளர்களும் கண் கலங்கிப் பேசுகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் ஷிவின் தன்னுடைய அம்மா பற்றி கூறி கண்கலங்கி அழுகின்றார்.அதன் பிறகு ரச்சிதா தனது குடும்பத்தை பற்றி கூறுகின்றார்.அதாவது தன்னுடைய அப்பா ரைவர் என்றும்“ தனது அம்மா படிக்காத ஆள் .அவங்களை பார்த்து வளரும் போது நான் சண்டை மட்டும் தான் போட்டு இருக்கேன்.பொண்ணு படிக்க மாட்டேங்கிறா எண்டு சொல்லிட்டு கழுத்தை நெரித்து செத்திடு செத்திடு எண்டு சொல்வது உண்டு.பெண் குழந்தையாக பிறந்திட்டா எனக் கூறி கண்கலங்கி அழுக ஆரம்பித்துவிட்டார் ரச்சிதா.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!