நடிகர் சூர்யா கீழடிக்கு குடும்பத்தோடு சென்றது, பரபரப்பாக பேசப்பட்டு ஒரு சில சர்ச்சைக்குள்ளான நிலையில், இதற்க்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்பதை புட்டு புட்டு வைக்க.. ரசிகர்கள் கண்டமேனிக்கு இவரை திட்டி பந்தாடி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஏப்ரல் 1ந் தேதி கீழடி அருங்காட்சியகத்தை, மனைவி ஜோதிகா, தன்னுடைய குழந்தைகள், அப்பா சிவக்குமார் மற்றும் அம்மாவோடு பார்வையிட்டார். மேலும் இது குறித்த சில புகைப்படங்களும் சோசியல் மீடியாவில், வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.
இதன் பின்னர் ஒரு சில சர்ச்சைகளுக்கும், இந்த நிகழ்வு வழிவகுத்தது. அதாவது, வழக்கமாக காலை 10 மணிக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட டிக்கெட் வழங்கப்பட்டு, அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
ஆனால் கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் ஏப்ரல் 1ந் தேதி... வந்த போது விதிமுறைகளை மீறி, 9 மணிக்கு கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அங்குள்ள பழங்கால பொருட்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.
அருங்காட்சியகத்திற்குள் சூர்யாவின் குடும்பத்தினர் 10 மணிக்கு மேலாகியும் இருந்ததால், பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். அத்தோடு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூர்யா குடும்பத்தால் விதிமுறையை மீறப்பட்டதாக மதுரை பாஜகவினர் சூர்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார் அளித்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினர்.
இவ்வாறுஇருக்கையில் , இந்த விவகாரம் குறித்தும்... இதன் பின்னணி குறித்தும் பேசி தான் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் பயில்வான். இதுகுறித்து பேசிய அவர் " கீழடி அருங்காட்சியகத்திற்குள் செல்ல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேஷன் உடன் இருந்ததால் யாருமே கட்டணமே சூர்யா குடும்பத்தினரிடம் கட்டணம் வசூலிக்க வில்லை.மேலும் அந்த பகுதியை சுற்றிப்பார்க்க இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால், அப்பகுதிக்கு வந்த மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்தார்கள். இது பிரச்சனை ஆகியும் சூர்யா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
உண்மையில் சூர்யா தன்னுடைய அவப்பெயரை மாற்றிக்கொள்வதற்காகத்தான் கீழடிக்கு வந்தார் என்று பரவலாக பேசப்படுகின்றது. அத்தோடு சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டார். இப்போது மும்பையில் தான் தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதனால் ரசிகர்களும், இயக்குநர்களும் சூர்யா மும்பையில் செட்டிலாகிவிட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று நினைத்த காரணத்தினால், அந்த அவப்பெயரை அழிப்பதற்காகத்தான் அப்பா, அம்மாவை கீழடிக்கு அழைத்து வந்துள்ளார்.
எனினும் அதே போல் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக கீழடிக்கு சூர்யா வந்ததாக கூறப்படும் நிலையில், எம்பி வெங்கடேஷனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? அது மட்டுமில்லாமல் அங்கு அத்தனை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் நீங்கள் எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன்? என பயில்வான் ரங்கநாதன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பயில்வானின் இந்த வீடியோவை பார்த்த சிலர் சரியாக தானே கேள்வி கேட்கிறார் என ஆதரவாக கமெண்ட் போட்டு வந்தாலும், சூர்யாவின் ரசிகர்கள்... சூர்யாவை நீங்கள் நினைப்பதெல்லாம் பேச கூடாது. அப்படி பேசுனா நீங்க புளுகு மூட்டை பயில்வான். என கொஞ்சம் காட்டமான வார்த்தைகளை பதிவிட்டு பந்தாடி வருகிறார்கள்.
Listen News!