• Sep 20 2024

அடுத்தடுத்து இயக்குநர் ஞானவேல் மீது பாயும் வழக்கு-தற்போது மோசடி புகாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான  திரைப்படம் தான் ஜெய்பீம் .இப்படம்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

ஆஸ்கர் போட்டி வரை சென்று திரும்பிய ஜெய்பீம் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளி குவித்து வருகிறது. அதே சமயம் படத்திற்கு எதிர்ப்புகளும் தொடர்கிறது.



ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டமிட்டே இயக்குநர் ஞானவேல் இழிவுப்படுத்தியதாக அவர் மீதும் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஏற்கனவே ஜெய்பீம் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதிதாக ஒரு வழக்கு இயக்குநர் ஞானவேல் மீது பாய்ந்துள்ளது.



ஜெய்பீம் படத்தின் கதையில் இடம்பெற்ற ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் என்பவர், இயக்குநர் ஞானவேல் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதில், கொளஞ்சியப்பன் கதாபாத்திரத்தை படத்தில் பயன்படுத்துவதற்காக தன்னிடம் ஞானவேல் அனுமதி பெற்றதாகவும், அதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் கூறி இருந்தார்.



மேலும் இந்த புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் படி, சாஸ்திரி நகர் போலீசார், இயக்குநர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் இதன்மூலமாக மீண்டும் ஜெய்பீம் பட இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பாட்டுள்ளது. ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு சூர்யா தரப்பு நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement