விஜய் டிவியில் வேறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும்.இந்த சீரியலில் அபியும் சுருக்கும் நடந்த விபத்து காரணமாக அபியின் நண்பர் வந்து நிற்கின்றார்.
அபியின் நண்பர் வருணை அபி இரண்டாவதாக திருமணம் முடித்து விட்டார் என கண்மணி கதை கட்டி விட்டார். இதனால் வெற்றிக்கு எப்போது சுடர் தன்னுடைய குழந்தை என்று தெரிய வரும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர்.இந்த நிலையில் சுடருக்கு பாடி காட்டாக வெற்றி அபியின் வீட்டில் தங்கியிருக்கின்றார்.
இந்த நேரத்தில் காலையில் எழுந்ததும் வெற்றி அபியிடம் உரிமையோடு காப்பி கொடு என்று கேட்க அபியும் பழசை எல்லாம் மறந்திட்டு கொண்டு வந்து தருகின்றேன் என்று கூறுகின்றார். பின்னர் அபி பாத்ரூமில் சறுக்கி விழுந்ததும் வெற்றி தாங்கிப் பிடிக்கின்றார்.
அத்தோடு அபி சாப்பிடும் போது புரக்கடிப்பதால் வெற்றி அவசரப்பட்டு தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் அபி வருணிடம் தண்ணீரை வாங்கிக் கொடுக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.
Listen News!