• Sep 20 2024

பிரபலங்கள் தவறவிட்ட வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியடைந்த நடிகர் சூர்யா ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' படம் சூர்யாவின் தரத்தை உயர்த்தியதோடு மெகா ஹிட் படமாக அமைந்தது.

சமீபகாலமாக சூர்யா நடிப்பில் சிறப்பான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பேரும், புகழும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.  தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான சவால் நிறைந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெற்றிகண்டு வருகிறார்.  இவரது கேரியரில் போலீஸ் கதாபாத்திரத்திற்கு பெயர்போன சிறப்பான படமென்றால் அது 'காக்க காக்க' படம், இந்த படம் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியையும், புகழையும் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றளவும் சூர்யா ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் டாப்பில் இருக்கும் திரைப்படம் என்றால் நிச்சயம் அது 'காக்க காக்க' படமாக தான் இருக்கும்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி, மனோ பாலா, கூல் சுரேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு முதன்முறையாக சூர்யாவிற்கு தான் வந்ததா என்றால் இல்லை, இந்த படத்தை தமிழ் சினிமாவின் சிகரங்களாக இருக்கும் சில முன்னணி நடிகர்கள் நிராகரித்த பின்னர் இந்த வாய்ப்பு சூர்யாவிற்கு சென்று அவரது திரைவாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையாக மாறியது. 

பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு படத்திற்கான கதையை ஒரு நடிகரிடம் கூறியதும், அவர் உடனேயே அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட மாட்டார்.  குறைந்தது ஒரு படத்திற்காக வேண்டி இயக்குனர் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நடிகர்களிடமாவது படத்தின் கதையை கூறியிருப்பார், அதன்பின்னரே படம் உறுதியாகும்.

அந்த வகையில் முதன்முதலில் 'காக்க காக்க' படத்தில் நடிக்கவைக்க கவுதம் மேனன் அணுகியது தளபதி விஜயை தான், ஆனால் அவரால் அந்த சமயத்தில் அந்த படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது.  அதனை தொடர்ந்து இந்த படம் அஜித்திற்கு தாவியது, அவராலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது, அடுத்ததாக நடிகர் விக்ரமை அணுகினார், அவராலும் இந்த படத்தில் சில காரணங்களால் நடிக்கமுடியாமல் போய்விட்டது. 

பின்னர் இப்படத்திற்கான வாய்ப்பு மாதவனுக்கு சென்றது, அவராலும் இந்த படத்திலும் நடிக்கமுடியமல் போனது, இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னர் மாதவனே கூறியிருந்தார்.  இவர்களுக்கு பிறகு தான் 'காக்க காக்க' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சூர்யாவிற்கு வந்திருக்கிறது, அவர் அதனை திறம்பட பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.

Advertisement

Advertisement