• Sep 20 2024

சுடர் தான் தன்னுடைய பிள்ளை என அறிந்த வெற்றி- உணர்ச்சி மிகுந்த தருணம்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 

அபியை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய வெற்றி தற்பொழுது சுடர் தன்னுடைய பிள்ளையா அல்லது அபி எடுத்து வளர்க்கும் பிள்ளையா என்பதை அறிய முயற்சி செய்து வருகின்றார். அந்தவகையில் முதற்கட்ட முயற்சியாக ராஜஸ்தான் சென்றுள்ளார்.


இந்த நிலையில தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அபி வெற்றியை கைது செய்து விட்டார். வெற்றியைக் கூட்டிக் கொண்டு போகும் போது ராஜஸ்தான் திருடர்கள் அபி மற்றும் போலீஸை வழிமறித்து சண்டையில் ஈடுபடும் போது வெற்றி அவர்களை அடித்து விடுகின்றார்.

அத்தோடு சுடர் பற்றி கீழே கிடந்த பேப்பரை எடுத்துப் பார்த்து சுடர் தான் தன் பிள்ளை என அறிந்து கதறி அழுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement