• Sep 21 2024

வெற்றி தான் தன்னுடைய அப்பா என்று சொன்ன சுடர்- அதிர்ச்சியில் உறைந்து நின்ற அபி- வெளியாகிய ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 

அபியை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய வெற்றி தற்பொழுது சுடர் தன்னுடைய பிள்ளை என்பதையும் தெரிந்து கொண்டு விட்டார். இதனால் சுடரைப் பார்க்க வேண்டும் என்று ஸ்கூல் வாசலில் காத்திருந்தார்.இருப்பினும் அபி சுடரை ஸ்கூலுக்கு அனுப்பவில்லை. இதனால் சுடரை வெற்றி கடத்தி விட்டார்.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அபி விஜியக்காவிடம் வெற்றி தான் சுடரை கடத்தியிருக்கிறான் என்று சொல்கின்றார். வெற்றியும் சுடரை யாருக்கும் தெரியாமல் எல்லா இடமும் சுற்றிக்காட்டிக் கொண்டிருக்கின்றார்.அப்போது அங்கு வரும் சிலர் வெற்றியிடம் இது யாரு கடத்திட்டு வந்தியா எனக் கேட்க சுடர் இது என்னுடைய அப்பா என்று சொல்கின்றார். இதனால் வெற்றி ஆச்சரியப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement