• Sep 20 2024

வருணைக் கண்டதும் கண் முழித்த சுடர்- அபியும் வருணும் திருமணம் செய்தது போல எடிட் செய்த போட்டோவைக் காட்டிய கண்மணி - வெற்றி எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் அபி வருணை திருமணம் செய்து விட்டார் என வெற்றி தவறாகப் புரிந்து கொண்டு ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்குச் சென்று விடுகின்றார். வீட்டில் இருந்து கொண்டு புலம்புகின்றார்.

இதையே காரணமாக வைத்து கண்மணியும் அபி குறித்து பொய்யான தகவல்களை கூறுகின்றார். இது ஒரு புறம் இருக்க வருண் கொடுத்த ரீட்மென்ட்மால் சுடர் கண் முழித்து விடுகின்றார். சுடர் கண் விழித்ததால் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


பின்னர் விடிந்ததும் வெற்றி அபி கல்யாணம் பண்ணிட்டா என்பதற்காக நான் எதுக்கு சுடர் கிட்ட பேசாமல் இருக்கணும் பாப்பா என்ன தப்பு செய்தது என்று சொல்ல சித்தப்பு அபி கல்யாணம் பண்ணிய விஷயத்தை அபிக்கிட்டநேராகக் கேட்டாலே உண்மை தெரிஞ்சிடும் என்று சொல்ல கண்மணி பயந்து போகின்றார்.


பின்னர் வெற்றி சுடர் கிட்ட பேசினால் எப்போதாவது உண்மை தெரிந்திடும் என்ற பயந்தால் அபியும் வருணும் திருமணம் செய்தது போல எடிட் செய்த போட்டோவைக் காட்டுகின்றார். அத்தோடு இந்த போட்டு விஜி அம்மா தான் அனுப்பி வைத்தாங்க என்று சொல்ல வெற்றி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement