தமிழில் போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் தாயார் சரஸ்வதி சற்று முன்பு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தற்போது 88 வயது என கூறப்படுகின்றது.கடந்த சில மாதங்களாக உடலநலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையிலுள்ள மணிசர்மாவின் சகோதரர் ராமகிருஷ்ணாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என கூறப்படுகின்றது.
இவ்வாறு இருக்கையில் இவரின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!