தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்தவர் தான் நடிகை சுஜா வருணி. இவர் 2002ம் ஆண்டு ப்ளஸ் 2 என்ற படம் மூலம் அறிமுகமாகி நிறைய சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார்.
அத்தோடு துணை நாயகியாக சில படங்களே நடித்திருக்கிறார், எனவே சினிமாவில் அவ்வளவு பெரிய ரீச் இல்லை. ஆனால் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட பிறகு சுஜா வருணியை தெரியாத ரசிகர்களே இல்லை என்ற அளவிற்கு பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததும் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தான் நிறைய வருடங்களாக காதலித்து வந்த சிவகுமார் என்பவரை 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சுஜா வருணி-சிவகுமாரின் 4வது திருமண நாள் அன்று கணவருடன் குளியல் தொட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்...
Listen News!