• Sep 20 2024

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரால் கர்ப்பமான பிரபல நடிகை? வைரலாகும் ஷாக்கிங் தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு ரூ.10 கோடி அளவில் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

அப்போது சுகேஷுடன் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்பில் இருப்பதாகவும், மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தன்னிடம் கூறியதாகவும் ஜாக்குலின் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் பல படங்களைத் தயாரிக்க இருப்பதாகவும் அவற்றில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். அவருடன் தினமும் மூன்று முறை போன் மற்றும் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்வோம். அவர் சிறையில் இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை.

என்னை அவர் முட்டாளாக்கிவிட்டார். அவரை நான் சென்னையில் இரண்டு முறை சந்தித்தேன். கடைசியாக கடந்த 2021 ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவருடன் பேசினேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் குறித்து உமர் சைந்து என்பவர் சொல்லியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை அடிக்கடி பகிரும் பத்திரிகையாளர் உமர் சைந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், சுகேஷ் சந்திரசேகரால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் கர்ப்பமானதாகவும் பின்னர் ஜாக்குலின் கருக்கலைப்பு செய்ததாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் குறித்து உமர் சைந்து என்பவர் சொல்லியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement