• Sep 19 2024

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுனைனா! 'விரைவில் மீண்டு பலமாக வருவேன்' என ரசிகர்களுக்கு தெரிவிப்பு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான நடிகை சுனைனா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் 

கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான Kumar Vs Kumari என்ற படத்தின் மூலம் திரையுலகில் தனது காலடி தளத்தை பதித்தவர் தான் நடிகை  சுனைனா.

இவர் தெலுங்கில் நடித்த படங்கள் அவரது நடிப்பிற்கும் அழகிற்கும் ஏற்ற வகையில் சிறப்பான வரவேற்பைப் பெற்று கொடுத்தது.

இதையடுத்து, தமிழில் வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். குறித்த படத்தில் முக்கியமாக சுனைனாவின் அழகு தமிழ் ரசிகரக்ளையும் பெரிதளவில் கவர்ந்தது. 


இவ்வாறு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தனக்கு கிடைத்த முக்கியத்துவத்தைவிடவும் தமிழில் முக்கியத்துவம் கிடைத்ததை உணர்ந்துகொண்ட சுனைனா தொடர்ந்து தமிழில் கவனத்தை திருப்பினார். 

அந்தவகையில் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இறுதியாக, அவரது நடிப்பில்  வெளியான ரெஜினா படம் போதிய வரவேற்பை பெறவில்லை. 

இவ்வாறான நிலையில் அவர் தற்போது  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தினை பகிர்ந்து தனது ரசிகர் வட்டாரத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளார் சுனைனா.

குறித்த புகைப்படத்தோடு 'எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் விரைவில் மீண்டும் பலமாக வருவேன்' என குறிப்பிட்டிருக்கிறார். 

இவரது பதிவை  பார்த்த ரசிகர்கள் சுனைனாவுக்கு என்ன ஆனது என்று கேள்வி கேட்டு வருவதோடு, அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். 

Advertisement

Advertisement