• Sep 21 2024

இவங்களால தான் சீரியலில் நடிக்கவே வந்தேன் காதல் பண்ணினது தப்பா?- முதல் முறையாக மனம் திறந்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பாரதிகண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் சர்மிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகை ராதா. இவர் சுந்தரா டிராவல்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவை நல்லதொரு அடையாளத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல மூலம் நல்ல ரீ்ச் கிடைத்துள்ளது.எனவே அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.அதாவது நான் சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படம் தான் நல்ல ரீச் கொடுத்திருச்சு.நான் இடையில் மக்களுக்கு என்மேல அதிகளவான நெக்கட்டிவ் ரோல் உருவாக காரணமாகிடுச்சு. இதனால ஒதுங்கிட்டேன் மீடியாவே வேணாம் என்று. சீரியலில் நடிக்க கூப்பிடும் போது எனக்கு இஸ்டம் இல்லை. ஆனால் அம்மா தான் இல்லை போ அதெல்லாம் இருக்காது மக்கள் ஏற்றக் கொள்ளுவாங்க என்று சொன்னாங்க.


அதை மாதிரி தான் சீரியலில் நடிக்கும் போது இயக்குநர் கூட வந்து சொல்லுவாங்க உங்களைப் பற்றி தான் அதிகமாக கேட்கிறாங்க என்று அதே மாதிரி சோஷியல் மீடியோவில கூட எனக்கு சர்ப்போட் பண்ணும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு இதை நான் எதிர்பார்க்கல. என்னை சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிக்க கூப்பிடும் போது முரளி சார் தான் ஹீரோ என்றாங்க என்னால நம்ப முடில முரளிசேர் இதை ஏற்றுக் கொள்வாரா என்று தான் கேட்டேன்.

அதுக்கு டிரக்டர் சொன்னாரு அவருக்கு ஓகே தான் நீங்க வாங்க என்று சொன்னாரு. கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டால் என்னும் பாட்டு தான் முதல் ஷுட் பண்ணினாங்க. அப்போ தான் முரளிசேரை நேர்லையே பார்த்தேன். செட்லையே நானும் வடிவேலு சேரும் தான் ரொம்ப குளோஸ் அவர் கிட்ட தான் அதிகமா பேசிட்டு இருப்பேன். படம் ரிலீஸ் ஆகும் போது கூட இவ்வளவு ரீச் கிடைக்கும் என்று எதிர்பார்க்கல.


ஆனால் அப்படம் பூகம்ப வெற்றி பெற்றது.அதுக்கு பிறகும் சில படங்களில் நடிச்சேன்.ஆனால் எனக்கு ஹோம்லி கேர் ஆக இருக்கணும்.அதுக்காகத் தான் சரி நடிப்பை விட்டு ஒதுங்கி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடலாம் என்று நினைச்சேன். அனால தான் 2012ல ஒருவரை நம்பி ரொம்ப ஏமாந்திட்டேன்.அவங்க பண்ணின தப்புக்கெல்லாம் நான் தண்டனை அனுபவிச்சேன். கடைசில நான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி ஆக்கிட்டாங்க. சின்ன வயசில காதலிக்கிறது என்பது பொதுவான விஷயம் தானே  ஆனால் அது என்னோட லைப்ல இவ்வளவு பிரச்சினையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.


நிறைய நெக்கட்டிவ் விமர்சனங்கள் தாங்கிகக் கொள்ளவே முடியாத அளவு கஷ்டத்தில இருந்தேன்.கடவுள் துணையால தான் இப்போ அதிலிருந்து விடுபட்டு கெரியரில் கவனம் செலுத்தி வருகிறேன். பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குநரிடம் முதலில் சொல்லியிருந்தேன். சேர் சீரியல் என்று ஏதாவது நடிச்சால் அது உங்க சீரியலாத் தான் இருக்கணும் என்று அது மாதிரி தான் அந்த சீரியல் அமைஞ்சிச்சு. இப்போ பண்ணிட்டு இருக்கிறேன்.கெரியரும் நல்லா போய்ட்டு இருக்கு என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement