• Sep 20 2024

மீண்டும் மீண்டும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் சுந்தரி- அனு எடுத்த முடிவு- நக்கலாக சிரிக்கும் கார்த்திக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.கார்த்திக் இரண்டாவதாக அனு என்பவரைத் திருமணம் செய்திருக்கும் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. 

இருப்பினும் அனுவுக்கு கார்த்திக் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.இந்த நிலையில் அருண் சுந்தரியைக் கொலை செய்ய முற்பட்ட போது அந்த கத்திக்குத்து கார்த்திக் மீது விழுந்துள்ளது.


இதனால் கார்த்திக் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். இந்த நிலையில் கார்த்திக்கை பார்க்க சொல்லி சுந்தரியிடம் அனுவும் அவரது அம்மாவும் சொல்கின்றனர்.இது ஒரு புறம் இருக்க அருண் கடுமையாக இருப்பதாகவும் அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் சுந்தரிக்கு தான் பிரச்சினை என்றும் வக்கீல் சொல்கின்றார். 


இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது. சுந்தரி எப்படி இதிலிருந்தெல்லாம் மீளப் போகின்றாள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement