• Sep 20 2024

கார்த்திக் அனுவைத் திருமணம் செய்திருப்பதை அறிந்து கோவமாகக் கிளம்பிய முருகன்- கடும் அதிர்ச்சியில் சுந்தரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி கருமை நிறம் கொண்ட பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையாகும். இதில், அவளது கல்யாண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களை எடுத்துக் காட்டுகிறது. 


எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், மனம் தளராத பெண்ணாக தனது ஐஏஎஸ் கனவை அடைவதற்கான பாதையில் பயணிக்கிறாள். இதில், அவள் எவ்வாறு தனது கடுமையான பாதையில் இருந்து வெளிவந்து சமாளித்து வருகிறாள் என்பதை எடுத்துக் கூறுவதாக அமைகிறது.

மேலும் இந்த கதையின் படி சுந்தரியின் கணவரான கார்த்திக் அனு என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்திருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் சுந்தரியின் மாமாவுக்கு இந்த விடயம் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது அவருக்கு எல்லா விடயமும் தெரிந்து விட்டது.


ஆனால் சுந்தரிக்கு தனது கணவர் இரண்டாவது திருணம் செய்து விட்டார் என்ற விடயம் தெரியாது என்ற எண்ணத்தில் இருக்கின்றார். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது முருகன் கார்த்திக்கை கண்ட துண்டமாக வெட்டாமல் வரமாட்டேன் என்று தனது மனைவியிடம் கோபமாக சொல்லி விட்டு கிளம்புகின்றார்.

இதனை பார்த்த சுந்தரி எதற்காக மாமா கோபமாகப் போகின்றார் எனக் கேட்க அவர் மாமாவுக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டது எனச் சொல்ல சுந்தரி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement