தமிழ் ரசிகர்கள் மத்தியில் 'சுந்தரி' என்ற சீரியல் வாயிலாக பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். அந்தவகையில் பளிச்சென்று இருக்கும் வெள்ளைத் தோல் நடிகைகள் பல நாடகங்களிலும் படங்களிலும் லீடு ரோலில் நடித்து வரும் நிலையில், கருப்பும் கலர் தான் என சன் டிவி சீரியலில் சுந்தரியாக லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன் நடிப்பின் மூலமாகவே கொள்ளையடித்திருக்கின்றார் கேப்ரில்லா.
நடிகையாக மட்டுமல்லாது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "மூப்பில்லா தமிழ் தாயே" பாடலின் மூலமாக பாடகி அவதாரமும் எடுத்து தனது ஒட்டுமொத்த திறமையையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி இருக்கின்றார் கேப்பிரில்லா.
இந்நிலையில், தற்போது இவர் ஜாக்கெட் அணியாமல் நடத்திய கவர்ச்சிப் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். அதாவது சீரியல், சினிமா என கலக்கி வரும் கேப்ரில்லா தற்போது ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை மட்டும் கட்டிக் கொண்டு கறுப்பு வெள்ளை போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது தமிழில் வித விதமாக இவர் பதிவிட்டுள்ள கேப்ஷன்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. அதாவது ஜாக்கெட் அணியாமல் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக, ""எனது ஆடையை வைத்து தான் எனது குணத்தை நீ மதிப்பிடுவாய் என்றால் அத்தகைய தேர்வில் நான் தோற்றாலும் மகிழ்ச்சியே" என பதிவிட்டு உள்ளார்.
மேலும், இன்னொரு போஸ்ட்டில், "சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம் , சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்" எனவும் குறிப்பிட்டு தத்துவங்களை பதிவிட்டு வருகிறார் கேப்ரில்லா செல்லஸ். இவ்வாறு ஜாக்கெட் அணியாமல் இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!