சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி. இதில் இதுவரை மக்களின் மனதை கவர்ந்த பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் தற்பொழுது முடிவுக்க் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.
கிராமத்தில் பிறந்த பெண் ஒருவர் தன்னுடைய கனவு படிப்பான IAS படிக்க பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே போராடி, IAS ஆகிறாளா? இல்லையா என்பது பற்றி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் அனுவைத் தவிர எல்லோருக்கும் கார்த்திக்கின் முதல் மனைவி சுந்தரி தான் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.இதனால் அனுவுக்கு எப்போது உண்மை தெரிய வரும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அனுவின் அம்மாவைப் பார்க்கப்போன சுந்தரி விஜியிடம் இருந்து அனு மேடத்தைப் பிரித்தாலே எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்கின்றார்.
மறுபுறம் விஜி, அனுவிடம் கார்த்திக் சேர் உங்களுக்கு முதல் சுந்தரியைத் தான் திருமணம் செய்திருக்கிறார் என்று செல்ல,அனு விஜியை முறைத்துப் பார்க்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!