• Sep 20 2024

தன் காலில் கார்த்திக் விழுந்த விடயத்தை கிருஷ்ணா மற்றும் மாலினியிடம் சொன்ன சுந்தரி- கார்த்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இது ஒரு புறம் இருக்க சுந்தரியின் அம்மா எதனால் பேசாமல் இருக்கிறார் என கேட்க சுந்தரி தன்னால் கர்ப்பமாக முடியாது என்ற விஷயம் தெரிந்ததால் தான் அம்மாவுக்க பேச்சு இல்லாமல் போனது என்ற விஷயத்தையும் சுந்திர மாமாவிடம் சொல்லி விட்டார். மேலும் அனுவின் வளைகாப்பையும் சிறப்பாக பண்ண முருகன் முடிவெடுத்து விட்டார்.

இப்படியான நிலையில் அனுவுக்கும் முருகனுக்கும் உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் சுந்தரி காலில் விழுந்து கார்த்திக் கெஞ்சுகின்றார். இதனை ஒருவர் கார்த்திக்கிற்கு வீடியோ எடுத்து அனுப்புகின்றார். இந்த வீடியோவைப் பார்த்ததும் கார்த்தி அதிர்ச்சியடைகின்றார். அத்தோடு சுந்தரி கார்த்திக் தன்னுடைய காலில் விழுந்த விடயத்தை கிருஷ்ணாவிடம் போய் சொல்கின்றார். இதனைக் கேட்ட கிருஷ்ணா அவனுக்கு அழிவு காலம் தொடங்கிடுச்சு என்று சொல்கின்றார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement