தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜனிகாந்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த.இந்தப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவன தாயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹிட்டடித்தது. இதையடுத்து அவர் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.
எனினும் தற்போதைக்கு தலைவர் 169 என்று அழைக்கப்படும் அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். அவரின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.
இப் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்குமென்று கூறப்படுகின்றது. அதையடுத்து தற்போது அந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது குழுவினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நெல்சனின் திரைக்கதைக்கு சில ஆலோசனைகள் வழங்க கே எஸ் ரவிக்குமாரை படக்குழு அனுகியுள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்தன. கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்ணாத்த மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களின் தோல்வியால் சன்பிக்சர்ஸ் ரஜினி படத்தின் பட்ஜெட்டை கணிசமாக குறைக்க சொல்லி நெல்சனிடம் வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது. ஆனால் அவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் படத்தை இயக்க முடியாதென நெல்சன் குழுவினர் மறுத்துவருவதாகவும் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்:
- நயன்தாரா தனது திருமணத்தில் மூலம் இவ்வளவு சம்பாதித்துள்ளாரா-ஷாக்கான ரசிகர்கள்…!
- விஜய்யின் அப்பாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வரும் புகைப்படம்..!
- “ விக்னேஷ் சிவனின் பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்..” அஜித் மேலாளர் மீது போலீசில் புகார்..!
- கமலுடன் இணையும் 90 கால கட்ட காமெடி நடிகர்..யார் தெரியுமா..?
- நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!