விஜய்டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் ப்ரியங்கா. இவர் தனது தேன் குரலால் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றதோடு தற்பொழுது பின்னணி பாடகியாக வளர்ந்து நிற்கின்றார்.
இது தவிர பல் டாக்டராகவும் இருந்து வருகின்றார்.இருப்பினும் இசை மீது இருந்த ஆர்வத்தினால் வெளிநாடு இசை கச்சேரியில் கலந்து கொள்கிறார். படங்களிலும் பாடல் பாடி வருகிறார்.
அந்த வகையில் கூடிய விரைவில் ரிலீஸாக உள்ள மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு 2 படத்தில் நெஞ்சே கேளு என்ற பாடலை பிரியங்கா பாடியுள்ளார். இந்த பாடலை பாடியது மட்டுமில்லை இந்த பாடலுக்கான புரமோஷன் வீடியோவில் ப்ரியங்காவே நடித்தும் இருக்கிறார்.
கடந்த வியாழக்கிமை சென்னை ecr கடற்கரையில் இதற்கான ஷூட்டிங் நடந்து இருக்கிறது. இதில் சூப்பர் சிங்கர் ப்ரியங்கா மற்றும் படத்தின் ஹீரோயின் ஆண்ட்ரியாவும் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள்.
பாடல் பாடிய அனுபவம் குறித்து பேசியுள்ள ப்ரியங்கா, “ இந்த பாடல் ஒலிக்கப்படும் சூழ்நிலையை எனக்கு மிஷ்கின் சார் மிகவும் நுட்பமாக புரிய வைத்தார். பாடலின் ட்யூனையும் உணர்வையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
ரெக்கார்டிங் செஷன் மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு நல்ல டேக்கிற்குப் பிறகும் என்னை பாராட்டினார்கள். பின்னர் தெலுங்கு பதிப்பையும் பதிவு செய்தோம்.” என்று கூறியுள்ளார்.
Listen News!